தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 59, செங்கல்பட்டில் 58 திருவள்ளூரில் மற்றும் காஞ்சிபுரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 6, கிருஷ்ணகிரியில் 3 மற்றும் மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தவிர அமெரிக்காவில் இருந்து வந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இன்று மொத்தம் 14,049 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 96 ஆண்கள் 43 பெண்கள் என மொத்தம் 139 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

52 பேர் இன்று குணமடைந்த நிலையில் 629 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.