தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 33, செங்கல்பட்டில் 46 காஞ்சிபுரத்தில் 2 மற்றும் திருவள்ளூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை, ராணிப்பேட்டை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் திருவாரூர் மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று மொத்தம் 12,824 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 46 ஆண்கள் 43 பெண்கள் என மொத்தம் 56 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

44 பேர் இன்று குணமடைந்த நிலையில் 493 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.