டில்லி

ந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

இன்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில், “இந்த வருடம் அதாவது 2022 ஆகஸ்ட்டில் சந்திரயான்-3-ஐ விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்திரயான்-2லிருந்து கற்றுக்கொண்டது மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் சந்திரயான்-3-ஐ வெற்றிகரமாக்கும் செயல்படுத்தும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுகின்றன.

மேலும் இது தொடர்பான வன்பொருள்கள் அவற்றின் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு 2022 ஆகஸ்ட்டில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.   வரும் 2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை 19 முறை 8 கலன்கள் விண்ணில் செலுத்தும் திட்டமும் உள்ளன. இதில் 07 விண்கலத் திட்டங்கள், 04 தொழில்நுட்ப செய்முறை திட்டங்கள் ஆகியவையும் அடங்கும்.

தற்போது நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.   ஆகவே விண்வெளித்துறை  சீர்திருத்தங்கள், புதிதாக அறிமுகம் செயபப்பட்டு இயக்கப்படும் மாதிரிகள். பின்னணியில் திட்டங்களுக்கு மறுமுன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது . இது குறித்து பல்வேறு திட்டங்கள் கடந்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.