சென்னை

மிழகத்தில் இன்று 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,52,856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,03,119 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,77,53,206 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் துபாயில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் இன்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,796 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 662 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 27,05,696 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 10,364 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 876 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,65,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 2 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,656 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 157 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,52,391 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 4,259 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு 158 பேருடன் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,76,015 பேர் பாதிக்கப்பட்டு 2,548 பேர் உயிர் இழந்து 1,72,503 பேர் குணம் அடைந்து தற்போது 964 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது.  இதுவரை கோவை மாவட்டத்தில் 2,53,634 பேர் பாதிக்கப்பட்டு 2,518 பேர் உயிர் இழந்து 2,50,217 பேர் குணம் அடைந்து தற்போது 899 பேர் சிகிச்சையில் உள்ளனர்.