சென்னை: பெண் திருமண வயது 21 ஆக உயர்த்தும் மசோதா ஆய்வுகுழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இது ஏற்கக்கூடியது அல்ல. பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் என திமுக. கனிமொழி கொந்தளித்துள்ளார். மேலும் தேசியவாத காங்கிரஸ் எம்.பி, சுப்ரியா சுலே, சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உள்பட உள்பட பல பெண் எம்.பி.க்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்,   பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆய்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இந்த மசோதாவானது ஜூன் 2020 இல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஜெயா ஜெட்லி கமிட்டியின் பரிந்துரைகளின்படி பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியதை சில உறுப்பினர்கள் எதிர்த்தனர் மற்றும் அதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரினர். மேலும் ஆய்வுக்கு. பாராளுமன்ற குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் குரல் எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து,  இந்த மசோதா கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர், விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக் கான பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வு நடத்த இருக்கிறது. இந்த ஆய்வு குழுவில்  31 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ஒருவர் மட்டுமே பெண். அவர் திரிணமுல் காங்கிரசை சுஷ்மிதா தேவ். இந்த குழுவின் தலைவராக பாஜகவை சேர்ந்த வினய் சஹஸ்ரபுத்தி உள்ளார்.

31 பேர் கொண்ட குழுவில், அதுவும் பெண்களின் திருமண வயது குறித்து ஆய்வு செய்யும் குழுவில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாதது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பெண் எம்.பி.க்கள் குழுவில் இடம் பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று திரிணமுல் காங்கிரசை சுஷ்மிதா தேவ் கூறினார்.  மேலும், மேலும் பெண்களை  சேர்க்க அழுத்தம் கொடுப்போம் என்றும், என்சிபி எம்பி சுப்ரியா சுலேவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.  மேலும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளில் சரியான கருத்தை தெரிவிக்கக்கூடிய அதிகமான பெண் எம்பிக்கள் குழுவில் இருக்க வேண்டும் என்று கூறினார்.

அதுபோல,  இந்நிலையில் பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களை ஆய்வு செய்யும் குழுவில் ஒரே ஒரு பெண் எம்பி மட்டும் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,  நாடு முழுவதும் உள்ள பெண்களின் வாழ்வை தீர்மானிக்கப்போகும் மசோதாவை ஆய்வு செய்யும் பாராளுமன்ற நிலைக்குழுவில் 30 ஆண் எம்பிகளும், ஒரே ஒரு பெண் எம்பியும் இடம்பெற்றுள்ளனர். 21 வயதில் பெண்கள் திருமணம் செய்யலாமா என்ற பெண்களின் தலைவிதியை 30 ஆண் எம்பிகள் தீர்மானிப்பது சரியா? இதை கவனத்தில் கொண்டு மசோதாவை ஆய்வு செய்யும் பாராளுமன்ற நிலைக்குழுவில் கூடுதல் பெண் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழியும் ஆய்வுக்குழுவில் ஒரே ஒரு பெண் எம்.பி. மட்டும் நியமித்து உள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில்  110 பெண் எம்.பி.க்கள் உள்ளோம்… ஆனால், பெண்ணுக்கான திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள 31 பேரில் 30 பேர் ஆண்கள்.. பெண்களுக்கான உரிமைகளை தொடர்ந்து ஆண்களே நிர்ணயிக்கின்றனர்… பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர்.. என காட்டமாக தெரிவித்துள்ளார்.