விஜய்யின் பீஸ்ட் படத்துக்காக போடப்பட்ட அரங்கை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

சென்னையில் கொட்டித்தீர்த்த பருவமழை பீஸ்ட் படத்திற்காக போட்ட அரங்கையும் விடவில்லை. அரங்கைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் படப்பிடிப்பு தடைபட்டுள்ளதாக படக்குழு கூறியுள்ளது.

இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. பிறகு சென்னையில் பிரமாண்ட ஷாப்பிங் மால் அரங்கு அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தினர். சென்னை புறநகரில் உள்ள ஸ்டுடியோவில் இந்த அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.