2015 வெள்ளம் மற்றும் வர்தா புயலின் போது நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவி செய்தனர். இலவச உணவு அளித்தனர்.

இந்தமுறை அப்படியான காட்சிகளை அரிதாகவே காண முடிகிறது. மாநகராட்சியின் சார்பில் வீதி வீதியாகச் சென்று இலவச உணவு வழங்கி வருகிறார்கள்.

அம்மா உணவகங்களிலும் மூன்றுவேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி விஜய் ரசிகர்கள் தளபதி நடமாடும் விலையில்லா உணவகம் என்ற பெயரில் ஆம்னி வேனில் உணவுகளை எடுத்துச் சென்று தேவைப்படுவோர்க்கு விநியோகித்து வருகின்றனர்.