அண்ணாத்த, எனிமி படங்கள் தீபாவளிக்கு வெளியாகிற நிலையில் மாநாடும் வெளியானால் குறைந்த திரையரங்குகளே கிடைக்கும் என்பதால் நவம்பர் 25-க்கு பட வெளியீட்டை சுரேஷ் காமாட்சி மாற்றி வைத்தார்.

இது மைக்கேல் ராயப்பன் மற்றும் பலரது சதி, தீபாவளிக்கு மாநாடு வெளியாகவில்லை என்றால் முதல்வர் வீட்டு முன் உண்ணாவிரம் இருப்பேன் என சிம்புவின் தாயார் ஸ்டன்ட் அடித்த கதையும் நடந்தது.

தீபாவளிக்கு வெளியான எனிமி அப்போதே அவுட்டானது. அண்ணாத்த படத்துக்கும் கூட்டமில்லை. நவம்பர் 19 பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால், நவம்பர் 25 மாநாடு படத்தை திரையிட திரையரங்குகள் தயாராகிவிட்டன.

படத்தின் விநியோக உரிமையை எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது. அவர் அளித்த தகவலின்படி அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகிவிட்டது. திங்கள்கிழமை முதல் விளம்பரத்தை முடுக்கிவிட உள்ளனர்.

மாநாடு படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை. அடுத்த வாரமே படத்தை தணிக்கைக்குழுவுக்கு திரையிட உள்ளனர்.