‘டான்’ படத்தை தொடர்ந்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

இப்படத்தை இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அசோக் இயக்க உள்ளார். இப்படத்திற்கு ‘சிங்கப்பாதை’ என தலைப்பு வைக்க உள்ளார்களாம்.

இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் டுட்லி ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே தமிழில் ஜுங்கா, ஆக்‌ஷன், பூமி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.