சென்னை:  தமிழ்நாடு ஆதி திராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை, சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர், பழக்குடியினர், பிற்பட்டோர் நலத்துறை சார்பான மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன. அப்போது, முதல்வர் ஸ்டாலின், விதி 110ன் கீழ்  தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பினை உருவாக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய ஆணையம் ஒன்றை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் இந்த அரசு உருவாக்க சட்டம் இயற்றும்.

அதற்கான சட்டமுன்வடிவ வரைவு இந்த சட்டமன்ற தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் சட்டப்பேரவையில் நேற்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை முதல்வர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் தாக்கல் செய்துள்ளார். மேலும், மாநில ஆதிதிராவிடர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’, சாதி வேறுபாடற்ற மயானங்களுக்கு ரூ.10 லட்சம்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…