சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 177 பேரும் கோவையில் 198 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,630 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,00,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,709 பேர் உயிர் இழந்து 25,47,005 பேர் குணம் அடைந்து தற்போது 19,171 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,42,555 பேர் பாதிக்கப்பட்டு 8,379 பேர் உயிர் இழந்து 5,32,555 பேர் குணம் அடைந்து தற்போது 2,129 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 198 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,34,244 பேர் பாதிக்கப்பட்டு 2,237 பேர் உயிர் இழந்து 2,29,778 பேர் குணம் அடைந்து தற்போது 2,229 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,64,469 பேர் பாதிக்கப்பட்டு 2,422 பேர் உயிர் இழந்து 1,60,920 பேர் குணம் அடைந்து தற்போது 1,127 பேர் சிகிச்சையில் உள்ளனர்.