சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 182 பேரும் கோவையில் 235 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,956 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,77,237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,340 பேர் உயிர் இழந்து 25,22,470 பேர் குணம் அடைந்து தற்போது 20,427 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,39,856 பேர் பாதிக்கப்பட்டு 8,340 பேர் உயிர் இழந்து 5,29,522 பேர் குணம் அடைந்து தற்போது 1,994 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 235 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,31,406 பேர் பாதிக்கப்பட்டு 2,194 பேர் உயிர் இழந்து 2,26,983 பேர் குணம் அடைந்து தற்போது 2,228 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,63,031 பேர் பாதிக்கப்பட்டு 2,411 பேர் உயிர் இழந்து 1,59,464 பேர் குணம் அடைந்து தற்போது 1,156 பேர் சிகிச்சையில் உள்ளனர்.