மும்பை

னமழையால் மும்பை நகரில் சுவர் இடிந்து விழுந்து 30 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மும்பை நகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த மழையால், பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாகின. ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  இதையொட்டி நீண்ட தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல இடங்களில்  மழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

மண் சரிவால் மும்பை செம்பூர் மகுல் பகுதியில் உள்ள பாரதி நகரில் சுற்றுச்சுவர் ஒன்று இடிந்து வீடுகளின் மீது விழுந்ததில், அடுத்தடுத்து இருந்த சில வீடுகள் இடிந்தன.  இந்த சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டது.  இதனால் 19 பேர் இறந்தனர். இதில் காயம் அடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் விக்ரோலி புறநகர் பகுதியில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மண்சரிவால்  6 குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் இறந்தனர். இங்கு காயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதைப் போல் பாண்டூப்பில் உள்ள வனத்துறை அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 16 வயது சிறுவன் இறந்தான்.

மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். தவிர, விக்ரோலி, செம்பூர் பகுதியில் நடந்த  விபத்துகளில் இறந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிரதமர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாகப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.