சென்னை: சென்னையில் முதன் முதலாக “யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டு உள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அலோபதி மருத்துவம் மட்டுமின்றி, சித்தா, ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் வகையிலான சிகிச்சை மையங்களுக்கும் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  தமிழக முதல்வர் ஸ்டாலின்  அறிவுறுத்தலின்படி இன்று சென்னை  சைதாப்பேட்டையில், கொரோனா நோயாளிகளுக்கு இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கும் வகையில்,  முதன் முதலாக “யோகா இயற்கை மருத்துவ கொரோனா சிகிச்சை மையம்”  120 படுக்கை வசதிகளுடன் திறக்கப்பட்டு உள்ளது. மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்துள்ளார்.