சென்னை: தமிழகத்தில் நேற்று  28,864 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. தலைநகர் சென்னையில் 2,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவி உள்ளது. இதனால், பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 28,864  பேர் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு   20,09,700 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

நேற்று மட்டும் தமிழகம் முழுவதும்   493 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  23,754 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரேந ளல் 32,982  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 17,39,280  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாநிலம் முழுவதம் 3,05,546  பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தலைநகர் சென்னையில் நேற்று  2,689 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 4,96,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளல்   93 பேர் உயிர் இழந்துள்ளார்  அதுபோல, நேற்று மட்டும் 5,795 பேர் குணம் அடைந்து மொத்தம் 4,48,377 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் சிகிச்சை  பெறுவோர் எண்ணிக்கை  35,423 ஆக உயள்ளது.

இன்று தமிழகத்தில் 28,864 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினசரி  கோவை 3,537 உடன் முதல் இடத்திலும் உள்ளது. கோவை சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையிலும் 39,047 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சென்னை 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.