ஜெய்பூர்: மனைவிக்கு கொரோனா உறுதியானதால் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: எனது மனைவி சுனிதா கெஹ்லாட்டுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வீட்டு தனிமையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
நானும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். வீட்டில் இருந்தபடி அரசு அலுவல் பணிகளை மேற்கொள்ள உள்ளேன் என்று கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel