சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு பயணிகள், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர மீண்டும் இ-பாஸ் சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை உச்சம்பெற்றுள்ளதால், ஏப்ரல் 20ந்தேதி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. தற்போது வரும் 26ந்தேதி அதிகாலை முதல் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
அதன்படி நாளை மறுதினம் ( திங்கட்கிழமை) முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
திரையரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை.
பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை.
உணவகங்கள் மற்றும் டீ கடையில் பார்சல் மட்டுமே அனுமதி.
சென்னை உள்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி.
அனைத்து வழிபாட்டு தளங்களிலும், வழிபட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்.
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் விமான பயணிகள் மற்றும் கப்பல் பயணிகள் இ-பாஸ் காட்ட வேண்டும்.
- தனியார் அரசு பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை.
- இறுதி ஊர்வலங்களில் பங்கேற்க அளிக்கப்பட்ட அனுமதி 50 லிருந்து 25ஆக குறைப்பு.
- திருமணம் மற்றும் திருமண சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 நபர்களாக இருந்த அனுமதி 50ஆக குறைப்பு.