சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்க ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியானது, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.65 கோடியும், மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.70 கோடியும் சேர்த்து ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா ஆரம்ப கொரோனா காலத்தில் கொரோனா சிறப்பு வார்டுகளை அமைத்த ஒப்பந்ததாரர்களுக்கு இதுவரை பணம் வழங்கப்படாத நிலையில், அதை தற்போது வழங்கும் வகையில், ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உடனே அவல்ரகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக, அனைத்து மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரிப்பால், கூடுதலாக படுக்கைகள் அமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் பழைய பாக்கியை கொடுத்துவிட்டு மீண்டும் சிறப்பு வார்டுகளை அமைக்கும்வகையில், ரூ.135.419 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]