ராய்பூர்: சத்தீஸ்கரில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொது மக்கள் பீதி அடைந்தனர்.

சத்தீஸ்கரில் இன்று நண்பகல் 12.53 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலாஸ்பூரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது.

ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

[youtube-feed feed=1]