கொல்கத்தா: மேற்கு வங்க துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட வில்லை என மத்திய ரிசர்வ் காவல் படை மறுப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4ம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூச் பெஹார் மாவட்டத்தில் சிதல்குச்சி பகுதியில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது தகராறு மூண்டது.

அதில் 4 வாக்காளர்களை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிஆர்பிஎப் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:

கூச் பெஹாரின் சிதல்குச்சி  சட்டசபை தொகுதிக்குள்பட்ட ஜெர்பட்கி வாக்குச்சாவடிக்கு வெளியே 4 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த வாக்குச்சாவடியில் சிஆர்பிஎப் வீரர்கள் பணி அமர்த்தப்படவில்லை. மேலும், இதில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

[youtube-feed feed=1]