அகர்தலா: திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றின் 2வது அலை பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின்படி நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன்.
தயவுசெய்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.
Patrikai.com official YouTube Channel