சென்னை
தமிழகத்தில் இன்று 3,672 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,03,479 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 23,777 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 79,442 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 1,96,85,598 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 3,672 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து 3 பேர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து 6 பேர் வந்துள்ளனர். இதுவரை 9,03,479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளார். இதுவரை 12,789 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,842 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,66,913 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,777 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
[youtube-feed feed=1]