மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 16,620 மற்றும் கேரளா மாநிலத்தில் 1,792 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 16,620 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 23,14,413 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 50 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 52,861 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 8,861 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 21,34,072 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,26,231 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 1,792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,91,271 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 15 பேர் மரணம் அடைந்து இதுவரை 4,397 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,238 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,57,097 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 29,474 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.