டில்லி
இன்று ஆந்திரா மாநிலத்தில் 74 பேர், மற்றும் டில்லியில் 239 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 8,90,766 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று இருவர் உயிர் இழந்து இதுவரை 7,176 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 61 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 8,82,581 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 1,009 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.
டில்லியில் இன்று 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 6,41,340 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இன்று 3 பேர் மரணம் அடைந்து இதுவரை 10,924 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 309 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 6,28,686 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 1,730 பேர் சிகிச்சையில் உள்ளனர். அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.