டெல்லி : மார்ச் முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறி உள்ளார்.

 

ஜனவரி 16ம் தேதி முதல் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள 188 மாவட்டங்களில் கடந்த 7 நாள்களில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இதுவரை 85 சதவீத முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இன்னும் சில நாள்களில் மீதமுள்ள பணியாளர்களுக்கும் செலுத்தப்படும்.  அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற உலக நாடுகளின் கனவுக்கு இந்தியா முன் உதாரணமாக இருக்கும்.

கொரோனா தடுப்பூசியால் இதுவரை எந்தவொரு மரணமும் பதிவாக வில்லை. தடுப்பூசி செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் மரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது. தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்தார்.