சென்ன‍ை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இந்திய பவுலர்களை விரக்தி நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். அவர் 210 ரன்களைக் கடந்து ஆடி வருகிறார்.

அவருக்கு துணையாக ஆறாவது விக்கெட்டாக ஆடிவரும் ஆலி போப் 24 ரன்களை எடுத்துள்ளார். தற்போது மூன்றாவது செஷன் ஆட்டம் நடந்துவரும் நிலையில், இதுவரை 1 இங்கிலாந்து விக்கெட்டை மட்டும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

சேப்பாக்கம் மைதானம் அந்தளவிற்கு தட்டையான மற்றும் பந்துவீச்சிற்கு ஒத்துழைக்காத ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பந்துவீச்சாளர்கள், இங்கிலாந்து பேட்ஸ்மென்களை எளிதாக ஊதித்தள்ளி விடுவார்கள் என்ற கூறப்பட்ட நிலையில், தற்போது நிலைமை வேறுமாதிரியாக உள்ளது.

இங்கிலாந்து அணி, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 460 ரன்களை சேர்த்துள்ளது. இன்றைக்குள் 600 ரன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.