டெல்லி: விவசாயிகள் போராடி வரும் நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு, விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும் தீர்வை எட்ட முடியவில்லை.
தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால் அங்கும் விவசாயிகளின் பிரச்னை, போராட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel