‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளார். இசையமைப்பாளராக இமான் பணிபுரியவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றுக்கு சத்யராஜ் நடிப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘சூர்யா 40’ என அழைத்து வருகிறது படக்குழு.