பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அரசியல், அவர்கள் இருவரையும் பிரித்து வைத்துள்ளது.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைதாகி ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் நலம் குறித்து பீகார் மாநில அரசியல் தலைவர்கள் பலர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவிடம் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரிடம் “லாலுவின் உடல் நிலை குறித்து விசாரித்தீர்களா?” என செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு நிதீஷ்குமார் “கடந்த 2018 ஆம் ஆண்டு லாலுவின் உடல்நிலை சரி இல்லை என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது கடைசியாக விசாரித்தேன். அதன் பிறகு லாலுவின் உடல் நலம் குறித்து நான் விசாரிப்பதில்லை.

லாலுவின் உடல் நிலை பற்றி பத்திரிகைகளில் பார்த்து தெரிந்து கொள்கிறேன்” என நிதீஷ்குமார் பதில் அளித்தார்.

– பா. பாரதி