மாஸ்கோ: ரஷியாவில் புதிதாக 20,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதியதாக 20,921 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2,351 பேர் எந்த அறிகுறியும் இல்லாதவர்கள்.

அதிகபட்சமாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 3,056 பேருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 36,98,273 ஆக உள்ளது. இன்று ஒருநாளில் மட்டும் மேலும் 559 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக பலி எண்ணிக்கை 68,971ஆக உயர்ந்துள்ளது.

24 மணிநேரத்தில் 27,779 பேர் கொரோனாவிலிருந்து குணமடைய,  குணம் அடைந்தோர் எண்ணிக்கை 31,09,315 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.