பெங்களூரு: கர்நாடகாவில் புதிய தலைமைச் செயலாளராக பி. ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக அரசின் தலைமைச் செயலாளராக பணிபுரிந்து வந்த டி.எம். விஜயபாஸ்கரின் பதவிக் காலம் நாளையுடன் முடிவடைகின்றது. இதையடுத்து, அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணிபுரிந்து வந்த பி. ரவிக்குமார் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1984ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தவர் பி. ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel