டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து வடமாநில விவசாயிகளின் போராட்டம் ஒரு மாதம் கடந்தும் நீடித்து வருகிறது. மத்திய அரசின் பேச்சுவார்த்தைகளில் எவ்வித தீர்வும் காணப்படவில்லை.
இந் நிலையில், விவசாயிகளின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் அரசு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: விவசாயிகள் விவகாரத்தில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, தீர்வு காணப்பட வேண்டும். விவசாயிகளின் தற்கொலை நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel