கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பிரபல நடிகர்கள் பெரும்பாலோனோர் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில், இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் மட்டும் ’’பிஸி’’ யாக இருக்கிறார்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், இங்கிலாந்துக்கு தனி விமானத்தில் பறந்து சென்று “பெல்பாட்டம்” என்ற படத்தின் ஷுட்டிங்கை முடித்து விட்டு வந்துள்ளார்.

அந்த படமும், சூரியவன்ஷி, லட்சுமி, அட்ராங்கி ரே ஆகிய படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்தப்படத்துக்கு ’’ராம் சேது’’என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வில்- அம்புடன் ராமர் படம் பின்னணியில் இருக்க கூர்க்கா அணிவது போல் முழுக்கால் சட்டையுடன் அக்‌ஷய் காட்சி அளிக்கும் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. கழுத்தில் காவி நிறத்தில் ‘கர்ஷிப்’பும் கட்டியுள்ளார்.

“ராமர் சிலைகளை பாதுகாப்போம்.அடுத்த தலைமுறைக்கான பாலத்தை கட்டுவோம்” என தனது இன்ஸ்டாகிராமில் அக்‌ஷய் குமார் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தை அபிஷேக் சர்மா டைரக்டு செய்கிறார்.

– பா. பாரதி