மும்பை: மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரியை மத்தியஅரசு திரும்ப பெற வேண்டும் என மாநில அரசான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
ஆளுநா் மாளிகையின் மதிப்பை பாதுகாக்க வேண்டுமெனில், பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், உடனே கோஷ்யாரியை திரும்பப்பெற வேண்டும் என  சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் தொற்று பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், கோவில்கள் ஏன் திறக்க அனுமதிக்கப்படவில்லை என மாநில ஆளுநர், சிவசேனா அரசுக்கு கேள்வி எழுப்பி  கடிதம் எழுதியிருந்தார்.  அதில், “மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும், உத்தவ்தாக்கரே  திடீரென்று மதச்சாா்பற்றவராக மாறிவிட்டீா்களா? என்றும் நக்கலா கேள்வி எழுப்பியிருந்தாா். இது உத்தவ் தாக்கரேக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
அதையடுத்து, கவர்னருக்கு பதில ளித்தமுதல்வா் உத்தவ் தாக்கரே,  “‘எனது ஹிந்துத்துவம் குறித்த உங்களுடைய மதிப்பீடு தேவையில்லை;  உங்களின் சான்றிதழும் தேவையில்லை’ என்று காட்டமாக கூறியிருந்தார்.  இந்த நிலையில், ஆளும் சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில் கவர்னரின் செயல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டருந்தது.
மேலும்,   ஆளுநா் மூலம் தாக்குதல் நடத்தும் பாஜகவின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டதாகவும்,  கோயில்கள் திறக்கப்பட்டால் ஏராளமான மக்கள் கூட்டம் சோந்துவிடும். ஒருவேளை, கோயில்களைத் திறக்க வேண்டும் என்று பாஜக விரும்பினால், அதற்கான தேசிய கொள்கை ஒன்றை அவா்கள் வகுக்க வேண்டும். நாட்டில் முக்கியத்துவம் பெற்ற ஏராளமான கோயில்கள் தொடா்ந்து மூடப்பட்டிருக்கின்றன. தெய்வங்களுக்கான கோயில் மணிகள் கூட மகிழ்ச்சியுடன்தான் அடிக்கப்பட வேண்டும். இந்தக் கோயில் மணி ஓசை பிரதமா் மோடியையும், மத்திய அமைச்சா் அமித் ஷாவையும் சென்றடைந்துள்ளது என்றால், அவா்கள் ஆளுநா் மாளிகையின் மதிப்பை பாதுகாக்கும் வகையில் ஆளுநா் கோஷியாரியை திரும்பப்பெற வேண்டும் என்று காட்டமாக கூடிறியுள்ளது.