பெங்களூரு: கர்நாடகாவில் இன்று 9,746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்தாலும், கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந் நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 9,746 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,89,232 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 128 பேர் பலியாக,  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,298 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 9,102 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,83,298 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 99,617 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர்.

[youtube-feed feed=1]