Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

இந்தியாவில் உச்சம் பெற்று வரும் கொரோனா: ஒரே நாளில் 86,432 பேருக்கு பாதிப்பு!

Sep 5, 2020

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 86,432 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது உலக அளவிலான ஒருநாள் தொற்று பாதிப்பில்  இந்தியா  முதலிடத்தில் உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 10 மணி அளவில் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 86432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப் பட்டோர் மொத்த எண்ணிக்கை   40,23,179 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில்  தொற்று உறுதியாகி இருப்பது மருத்துவ நிபுணர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே அச்சத்தை உருவாக்கி வருகிறது.
கடந்த  24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு காரணமாக 1089 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69561 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.73 சதவீதமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 70072 பேர் குணமடைந்துள்ளனர்.  குணமடைந்த வர்களின் எண்ணிக்கை  31,07,223 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 77.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 846395 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 4,77,38,491 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது, நேற்று ஒரே நாளில்  மட்டும் 10,59,346 மாதிரிகள் சோதனை செய்யப்பட் டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Post navigation

அதிமுக எம்எல்ஏ சக்கரபாணி, திமுக எம்எல்ஏ அப்பாவு-க்கு கொரோனா உறுதி…
05/09/2020:  சென்னையில் கொரோனா  பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer