‘காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வேண்டும்’’ என சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய மூத்த தலைவர்களில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் ஒருவர்.

இதனால் அவரை அங்குள்ள காங்கிரசார் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

‘’ சசிதரூர் , காங்கிரஸ் கட்சியில் ஒரு கவுரவ நடிகர். அவருக்கு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசும் அளவுக்கு முதிர்ச்சி கிடையாது’’ என்று காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன்’’ உள் கட்சி விவகாரங்கள் குறித்து யாரும் வெளிப்படையாக பேச வேண்டாம்’’ என தடை போட்டுள்ளார்.

இதனை யடுத்து சசிதரூர் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு எம்.பி.சுரேஷ், வருத்தம் தெரிவித்துள்ளார்.

-பா.பாரதி.