சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், சிகிச்சை பலனின்றி காலமானார் . அவருக்கு வயது 70.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 10ந்ததி சென்னை அப்போலோ மருத்துவமனையில், வசந்தகுமாரும், அவரது மனைவியில் அனுமதிக்கப்பட்டனர். அவரது மனைவி சிகிச்சை குணமடைந்த நிலையில், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வசந்தகுமார், தொடர்ந்து அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை முதல் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலை, சிகிச்சை பலனின்றி அவர் உயிர்பி ரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தின் பிரபல வீட்டு உபயோகப்பொருட்கள் நிறுவனமான வசந்த் அன்கோ உரிமையாளரான எச்.வசந்தகுமார்,  2 முறை எம்எல்ஏவாகவும், தற்போது கன்னியாகுமரி எம்.பி.யாகவும் பதவி வகித்து வருகிறார்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான முதல் எம்.பி. வசந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சகோதரர் குமரி அனந்தன். மூத்த காங்கிரஸ்வாதியும், இலக்கியவாதியாமாவார்.