சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3லட்சத்து 73-ஆயிரத்தை கடந்ததுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 5,980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,73,410 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 80 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,420 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 5,603 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,13,2807-ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் மேலும் 1,294 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் மட்டும் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24,071 -ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனாவில் இருந்து 1,08,545 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை 2564 பேர் உயிரிழந்துள்ளனர்.