அமராவதி:  ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 8,732 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சில நாட்களாகவே அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் 24 மணி நேரத்தில் மேலும் 8,732 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன் மூலம் ஒட்டு மொத்தமாக மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 2,81,817 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில்  கொரோனாவால் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகையால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,562 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரேநாளில் 10,414 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,91,117 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தற்போது வரை 88,138 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]