
தேனி:
மலையேற்றப் பயிற்சிக்காக சென்று, குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
39 பேர் டிரெக்கிங் (மலையேற்ற பயிற்சி) சென்ற நிலையில் 27பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் 9 பேர் இறந்துவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, உயிரிழந்தவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சென்னையை, சுசிலா, ஹேமலதா, புனிதா, சுபா, அருண் ஆகிய 5 பேரும், கோவையை சேர்ந்த விபின், ஈரோட்டைச் சேர்ந்த விவேக். திவ்யா, தமிழ்செல்வன் ஆகியேர்.
இவர்களில், தமிழ்ச்செல்வன், திவ்யா கணவன்-மனைவி என்றும், இதுவரை 2 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.
[youtube-feed feed=1]