சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் 70 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், 9 ஐஏஎஸ் அதிகாரிகளையும் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார்.
நில நிர்வாகம் ஆணையர் பழனிசாமி, கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் கஜலட்சுமி, நில நிர்வாகம் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கிரண் குராலா, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
அறிவியல் நகரம் துணைத் தலைவர் தேவ் ராஜ் தேவ், தமிழ்நாடு உப்பு நிறுவன முதன்மை செயலாளராகவும், வரலாற்று ஆராய்ச்சி, ஆவணக் காப்பக ஆணையர் ஹர் சஹாய் மீனா, அறிவியல் நகர துணைத் தலைவராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீர்வளத்துறை சிறப்பு செயலாளர் மலர்விழி, வரலாற்று ஆராய்ச்சி மற்றும் ஆவணக்காப்பக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் கோபால சுந்தர ராஜ், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித்துறைத் தலைவர், இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு துணைச் செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
