சென்னை: தமிழ்கத்தில் தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறவிலை. இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 15ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தேர்தலுக்கான கால அவகாசம் இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்காமல், தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

அதன்படி, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. www.tnsec.tn.nic.in என்ற மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் பெயர், வார்டு உள்ளிட்ட விவரங்களை அந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

6 மாதம் அவகாசம் கேட்டு மனு! உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மக்களை குழப்பும் திமுக அரசு…