பெய்ஜிங்:

சீனாவின் வடக்கு ஷான்க்சி மாகாணத்தில் மலைகள் சூழ்ந்த லுலியாங் பகுதியில் நிலநடுக்கம், நிலச்சரிவு அடிக்கடி ஏற்படுவது உண்டு. இந்த வகையில் இன்று அதிகாலை 5 மணியளவில் இங்கு திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கி கொண்டனர்.

எந்திரம், ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் மீட்பு படையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 9 பேரது உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது.