காபுல்:

ஆப்கானிஸ்தான் தென்கிழக்கில் உள்ள கன்ஸி மாகாணம் ஜக்ஹாட்டு மாவட்டத்தில் உள்ள 2 சோதனைச்சாவடிகள் மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல் ஜலாலாபாத் நன்கர்ஹார் பல்கலைக்கழகம் அருகே காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை யினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.