சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 7வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணியை தமிழகஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதுவரை 6 கட்ட மெகா முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று 7வது கட்டமாக மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும்  200 வார்டுகளில் ஏறத்தாழ ஆயிரத்து 600 முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி நடை நடைபெறுகிறது. இன்றைய தடுப்பூசி மையங்களுக்கு ஒட்டுமொத்தமாக 40 லட்சம் டோஸ்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டுமென சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.