ண்டன்

ரே நாளில் பிரிட்டனில் 78,610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டனில் ஒரே நாளில் 68,053 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  இது அப்போது மிகவும் அதிர்ச்சியை அளித்தது.  இந்நிலையில் தற்போது அதை விட கூடுதலாக ஒரே நாளில் 78,610 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பு முதல் முறையாகும்.

மேலும் பிரிட்டனின் ஒரு சில பகுதிகளில் கொரோனாவின் திரிபான ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், அதிகரித்திருப்பதாக அந்நாட்டின் தலைமை சுகாதாரத்துறை அதிகாரி கிறிஸ் விட்டி கவலை தெரிவித்துள்ளார். வரும் வாரங்களில் ஒமிக்ரானால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஒமிக்ரான் பரவல் தற்போதைய சூழலில் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், ஆனால் அது எந்த அளவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்பதைக் கூற இயலாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். . ஆயினும், இதுவரை அறிந்த வகையில் இந்த புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் நிச்சயம் மோசமானதாக இருக்கும் என்பது தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.  தற்போது பிரிட்டனில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 45 சதவிகிதம் பேரும், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 88 சதவிகிதம் பேரும் மூன்றாவது டோஸ் செலுத்திக் கொண்டுள்ளனர்.