சென்னை: திமுகவின் 4ஆண்டு கால ஆட்சியில்  7,560 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது”   என்று கூறிய அமைச்சர் சேகர் பாபு, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் 3,000-வது குடமுழுக்கு நாகை மாவட்டம் திருப்புகழூரில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.  மேலும், எந்தவொரு கோவிலிலும்  தனியார் பெயரில் நிதி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை மண்ணடி, தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற உள்ள திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.  பின்னர்  செய்தியாளர்களை சந்திததார். அப்போது  அவர் கூறியதாவது,

சென்னை மண்ணடியில் உள்ள தம்பு செட்டி தெருவில் இருக்கும் காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் சுமார் 1 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் 17 திருப்பணிகள் நடைபெற உள்ளது. அதனை இன்று தொடங்கி வைத்து உள்ளோம். இந்த கோயிலில் வருகின்ற 28 ஆம் தேதி வெள்ளி தேரோட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் “இன்று மட்டும் 8 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. இதுவரை 2,956 கோவில்களில் குடமுழுக்கு நடந்து உள்ளது. வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி 3 ஆயிரம் ஆவது குடமுழுக்கு நடைபெற உள்ளது. நாகை மாவட்டம் திருப்புகழூரில் உள்ள திருக்கோவிலில் நடைபெற உள்ள 3 ஆயிரமாவது குடழுழுக்கு விழாவிவ் துறை அமைச்சர் என்ற முறையில் கலந்து கொள்ள உள்ளேன் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,   இதுவரை 7 ஆயிரத்து 560 ஏக்கர் அளவிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. நில அளவு கற்கள் இரண்டு லட்சதை நிறைவு செய்ய இருக்கிறோம்”என்று கூறினார்.

மேலும், கோவில் பெயரில் நிதி வசூல் செய்தால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர்,  தமிழ்நாடு முழுவதும் இனி எந்தவொரு கோவிலிலும் தனியார் அமைப்புகள் மற்றும் கட்சிகளின் பெயரில் நிதி வசூல் செய்தால் அவர்கள்மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறியவர்,   முன்னாள் கவர்னர், தமிழிசை சௌந்தரராஜன்  எழுப்பிய, நீங்களும் உதயநிதியும் மெல்ல மெல்ல சனாதானத்தை ஏற்றுக்கொண்டதால் தான் கோயில்களில் அன்னதான உணவுகளை வழங்கி வருகிறார்கள் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,  “கைப்பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம் என்று தமிழிசை பேசி வருகிறார்.

பழுத்த மரத்தில் தான் கல்லடிப்படும் என்பது போல் துணை முதல்வர் இன்று புகழ் உச்சியில் இருக்கிறார். தளபதிக்கு தோள் கொடுத்து சுமக்க தயாராக இருக்கிறார். அதனால் தான் இது போன்ற விமர்சனங்கள் வருகிறது. இறைப்பசியோடு வருபவர்களுக்கு வயிற்று பசியும் போக்கும் ஆட்சி தான் நடத்து வருகிறது” என தெரிவித்தார்.

பின்னர் ஆளுநர் அரசுமீது கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் கூறியவர், “அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக தான் சம்பந்தம் உள்ளது. அதுக்கு முன்பாக எந்த சம்பந்தமும் தமிழ்நாட்டோடு கிடையாது. தமிழ் மொழியே இங்கு வந்து தான் கற்றுக் கொள்கிறேன் எனக் கூறுகிறார். அப்படி இருக்கையில், கவர்னர்  தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என தெரிவித்தார்.