சென்னை: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 729 புதிய வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இ லங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டுப்பட்டுள்ள புதிய வீடுகளை, காணொளி மூலம் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, திருப்பூர், விழுப்புரம், சேலம், விருதுநகரில் 729 புதிய வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 38.76 கோடி.
Patrikai.com official YouTube Channel