சென்னை: தமிழ்நாடு அரசு பெண்களுக்காக மாநிலம் முழுவதும் இயக்கி வரும் அரசு இலவச  பேருந்துகளில் இதுவரை 700 கோடி பயணங்கள் நடைபெற்றுள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், பெண்களை கவரும் வகையில்,  பிங்க் கலர் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டு, அதில் பெண்கள் இலவசமாக பயணிக்க கூறியது. இதற்கு மகளிர் விடியல் பயணம் என்று கூறியது. இந்த ‘மகளிர் விடியல் பயணத் திட்டத்தில்  தமிழகம் முழுவதும்  700 கோடி பயணங்கள் நடைபெற்றுள்ளதாக என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்  வெளியிட்டு தகவலில்,  தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் மிக முக்கிய திட்டமாக, மகளிர் விடியல் பயணத்திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர். இந்தத் திட்டத்துக்கு தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மகளிர் விடியல் பயண பேருந்துகளில் நாள்தோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்வதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தில் (நேற்று) 29.05.2025 வரை தமிழ்நாடு முழுவதும் மகளிரால் 700.38 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பயணம் 7,671 பேருந்துகளில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.